பாளையங்கோட்டை மாவட்ட தொழில் மையம் அருகில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தினை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் பொது நூலக இயக்குநர் சங்கர் இன்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. இரா. சுகுமார் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.