திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 21) இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தென்தமிழ்நாடு, தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் இதன் காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.