கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனி மேலாளர் செந்தில்வேல் அளித்த புகாரில், நிறுவனத்திற்கு சொந்தமான ஜேசிபி காணாமல் போனதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஈஸ்வரன் (32) என்பவர் ஜேசிபியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் ஈஸ்வரனை இன்று கைது செய்து, திருடப்பட்ட ஜேசிபி இயந்திரத்தையும் மீட்டனர்.