திருநெல்வேலி: மது அருந்த பணம் கேட்டு அடாவடி; வாலிபர் கைது

திருநெல்வேலி பழைய பேட்டையில், மது அருந்த பணம் தர மறுத்த இளைஞரை அருவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் லட்சுமணன் (21) என்ற இளைஞரை பேட்டை போலீசார் கைது செய்தனர். உமாசங்கர் மகன் இசை வினோத் (21) என்பவர் குளக்கரை பள்ளிவாசல் அருகே சென்றபோது, லட்சுமணன் அவரை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால், அருவாளைக் காட்டி மிரட்டியதாக இசை வினோத் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி