நெல்லை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு மத்தியில், நேற்று (மே 6) மாலை நெல்லை மாநகரப் பகுதியில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, கொக்கிரகுளம், சமாதானபுரம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.