திருநெல்வேலி மாநகராட்சி 16வது வார்டில் உள்ள உழவர் சந்தை மற்றும் அரசு மருத்துவமனை அருகே ஓடை தூர்வாரப்படாததால் நீர் தேங்கியுள்ளது. இது குறித்து அகில இந்திய யாதவ மகாசபை நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணனிடம் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக மேயர் அதிகாரிகளை அனுப்பி வைத்தார். நேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டனர்.