நெல்லை மாநகர பேட்டை செக்கடி ஸ்டாப் அருகில் உள்ள மின் கம்பத்தில் இன்று (மார்ச் 29) அரசு பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அதிகாலையில் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.