மானூர் அருகே தெற்குப்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில், தாங்கள் வசிக்கும் இடம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி இடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அதுவரை தங்களை இடையூறு செய்யக்கூடாது என மனுவில் கூறியுள்ளனர்.