நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொ) மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்னை மாநகர போலீஸ் சட்டம் 1997ன் படி நேற்று (பிப். 22) முதல் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நெல்லை மாநகரில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா போன்றவை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.