தொடர்ந்து இன்று (ஏப்ரல் 1) காலை நெல்லைக்கு செல்ல பூலையா முத்தூர் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த கணேசன் பூலையாவிடம் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பூலையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தப்பியோடிய கணேசன் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இவரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.