டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வேணுவன குமாரர் திருக்கோவிலில் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.