நெல்லை கொண்டா நகர பேருந்து நிறுத்தத்தில் நேற்று இரவு சாலையில் ஊர்ந்து சென்ற கண்ணாடி விரியன் பாம்பை பொதுமக்கள் அச்சத்துடன் கண்டனர். தகவலறிந்து விரைந்த பேட்டை தீயணைப்புத் துறையினர், சாமர்த்தியமாக பாம்பைப் பிடித்து சாக்கு பையில் அடைத்து, பின்னர் வனப்பகுதியில் விடுவித்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.