நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம்தோறும் மகளிர் சுய உதவி குழுவின் விற்பனை பொருட்கள் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் சுய உதவி குழு பொருட்கள் கண்காட்சி கடந்த மாதம் நடைபெறவில்லை. இதையடுத்து இன்று (ஜூன் 9) குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இதனை அரசு ஊழியர்கள் பார்வையிட்டு வாங்கி சென்றனர்.