நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியிலிருந்து உவரி, இட்டமொழி, இராஜீவ்காந்தி நகர் ஆகிய மூன்று வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகளை சபாநாயகர் அப்பாவு இன்று துவக்கி வைத்தார். சேவைகளை துவக்கி வைத்த பின்னர், அவர் பேருந்தில் ஏறி மக்களுடன் மக்களாக பயணம் செய்தார். மேலும், அவர் பயணச்சீட்டுக்கும் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்தார்.