திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அத்தியடி தெரு அருகில் கடந்த வாரம் நடைபெற்ற சாலை விபத்தில் இலியாஸ் என்ற இளைஞர் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (10.07.2024) உயிரிழந்தார். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.