ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மருந்து வணிகர் சங்கத்தினர் இன்று (மே 20) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக நெல்லை மாநகரின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் மெடிக்கல்கள் திறக்கப்படவில்லை. அவசரத்திற்கு மருந்து வாங்க வந்த நோயாளிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.