ALERT: வெளுத்து வாங்க போகும் கனமழை; நெல்லை மக்களே அலர்ட்

தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று (ஜூன் 14) தமிழ்நாட்டில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், தர்மபுரி, காரைக்கால், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூன் 14) கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி