காதல் திருமணம் செய்து 6 மாதங்களே ஆன நிலையில், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 23 வயது இளைஞரின் உடலுறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கியுள்ளனர். நெல்லை சவுந்தர லிங்கபுரத்தைச் சேர்ந்த மகேஷ், டூவீலரில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்ததாக அறிவித்ததை அடுத்து, அவரது குடும்பத்தினர் கல்லீரல், நுரையீரல், கண்கள், சிறுநீரகங்கள், தோல் ஆகியவற்றை தானம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.