முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நாங்குநேரி வடக்கு ஒன்றியம் பானாங்குளம், கூந்தன் குளம், மூலக்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் உருவப் படத்தை கையில் ஏந்தியபடி அதிமுக தொண்டர்கள் அவரது புகழைப் பாடினர்.