திருநெல்வேலி மாநகர மேலப்பாளையம் சந்தை வாட்டர் டேங்க் அருகில் உள்ள குப்பை கிடங்கில் நேற்று(அக்.03) காலை குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் மேலப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.