இவரது பைக் அம்மாண்டி விளை பகுதியில் சென்றபோது எதிரே கூடங்குளம் பகுதியில் வேலை பார்த்து வரும் முத்துக்குமார் (25) என்பவர் ஓட்டிவந்த பைக் அடுத்தடுத்து இரண்டு பைக்குகள் மீதும் மோதியது. இந்த விபத்தில் 3 பைக்குகளில் வந்த அனைவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சகாய அனிஷ் மீட்கப்பட்டு சுசீந்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
லேசான காயமடைந்த தாணுமாலையன், மனைவி ஜெகதீஸ்வரி, ஆறு வயது சிறுவன் ஆகியோர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்தில் முத்துக்குமார் காயமின்றி தப்பினார். இதுகுறித்து சகாய அனிஷ் அளித்த புகார் மீது விபத்து ஏற்படுத்திய முத்துக்குமார் மீது மனவளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.