தொடர்ந்து குழித்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும் மீனவ மக்களுடன் சேர்ந்து இராமன்துறை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த நிர்த்தீஸ் (20) என்ற வாலிபரின் உடலை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்த தகவல் வாலிபரின் பெற்றோருக்குத் தெரியவர அங்கு வந்து அவர்கள் கதறி அழுதநிலையில் வாலிபரின் உடலை புதுக்கடை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்