கருங்கல்: மாணவிக்கு பாலியல் தொல்லை;  டியூஷன் ஆசிரியர் கைது

கருங்கல் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (41) இவர் தனது வீட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். இதில் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியும் அவரது சகோதரரும் அங்கு சென்று வந்தனர். சம்பவத்தன்று அந்த ஏழாம் வகுப்பு மாணவியை மட்டும் தனியாக ஆசிரியர் மகேஷ், அறையில் அழைத்துச் சென்று மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

மாணவி உடனடியாக கூச்சலிட்டார். சத்தம் கேட்டு மாணவியின் சகோதரர் அங்கு ஓடிச் சென்றார். உடனடியாக அங்கிருந்து வீட்டில் கிளம்பினர். இந்தச் சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தனர். மாணவியின் தாயார் உடனடியாக குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி