அருமனை: ஆற்றில் இறந்து கிடந்த ஐடிஐ மாணவர்

திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் மகன் ஆதித்யன் (20). இவர் ஐடிஐ மாணவர். நேற்று மாலை நண்பர்கள் 11 பேருடன் குமரி மாவட்டப் பகுதியான அணைமுகம் அருகே உள்ள கருப்பையாற்றில் இறங்கிக் குளித்தனர். அப்போது பாறையில் எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்த ஆதித்யனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆதித்யன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இந்தச் சம்பவம் குறித்து வெள்ளறடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி