சிவந்திபுரம் அருகே விகே. புரத்தைச் சேர்ந்த சண்முகம் 2017ல் கேஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்துக்கு கேஸ் நிறுவனமும் மின்சார வாரியமும் செய்த சேவை குறைபாடே காரணம் என அவரது மகன் கார்த்திக் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று (பிப்ரவரி 17) நுகர்வோர் நீதிமன்றம் கேஸ் நிறுவனத்திற்கும் மின்சார வாரியத்திற்கும் ரூ. 23,89,165 இழப்பீடாக 45 நாட்களுக்குள் சண்முகத்தின் வாரிசுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டது.