நெல்லையின் முக்கிய சுற்றுலா தலங்களான பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல இனி சோதனை சாவடியில் ஆன்லைன் மூலம் மட்டுமே வாகன மற்றும் நுழைவு கட்டணம் செலுத்த முடியும். பணமாக கட்டணம் செலுத்தும் முறை நாளை முதல் முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. இனி UPI அல்லது QR கோட் மூலமாக மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.