பாளை தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் சக மாணவனால் வெட்டப்பட்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று இரவு அளித்த பேட்டியில் இவ்வளவு பெரிய விஷயம் நடந்த பின்பும் பள்ளி நிர்வாகம் எங்களிடம் பேசவில்லை. ஒரு ஆறுதல் கூட சொல்லவில்லை. அரசு அதிகாரிகளும் எங்களை பார்க்க வரவில்லை என்றார்.