நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகரநிகழ்ச்சியாக அவர் எட்டாம் தேதி ஆனித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்நிலையில் நெல்லைக்கு வருகைதந்துள்ள மாவட்டப் பொறுப்புமைச்சர் கேஎன் நேரு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன் ஆகியோர் இன்று நெல்லையப்பர் கோயில் ரதவீதிகளில் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்கள்.