களக்காடு அருகே செங்களாகுறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நெருஞ்சிவிளை கிராமத்தில் கடந்த 8 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊர் முகப்பில் பேனர் வைத்துள்ளனர்.