நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் பல்வேறு இடங்களில் மழை நீடித்தது. குறிப்பாக அம்பை நகர் பகுதியில் இன்று (நவம்பர் 14) பகல் முழுவதும் பனிமூட்டம் காணப்பட்டது. மாலை திடீரென அம்பை பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.