நெல்லை: சொரிமுத்து அய்யனார் கோயிலை சூழ்ந்த வெள்ளம்

தொடர் மழையால் பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வருகிறது. நீர்மட்டம் 131 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அதிகளவு தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், நேற்று அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் அருகில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலைச் சூழ்ந்தது. புகழ்பெற்ற இக்கோயிலைச் சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பக்தர்கள் செல்லாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி