நெல்லை விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த தெருநாய் கடித்ததில் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்து அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 6 பேர் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஜெசிந்தா, பிரேமா, தனுசு வேல், பாலமதி, தீரன், மதன்குமார் உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.