அம்பை: மூதாட்டி பத்திரமாக மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனது குடும்பத்தினருடன் பாபநாசம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது கோவில் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது தண்ணீர் அதிகமாக இருந்ததால் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறையினர் மூதாட்டியைப் பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி