சேரன்மாகதேவியில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் கீழத்தெரு அம்மைநாத சுவாமி கோவில் பகுதி உள்ளிட்ட இடங்களில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் வயல்களில் மழை நீர் தேங்கியதால், நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.