கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி கீழே விழுந்த தங்கள் மீது ஏறி ஓடியதாக உயிர் தப்பிய சிறுமி பரபரப்பு பேட்டியளித்துள்ளார். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 39 பேர் பலியான நிலையில், கரூர் நகரே மரண ஓலத்தில் தத்தளிக்கிறது. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கூட்டத்தில் நூழிலையில் உயிர் தப்பிய சிறுமி ஒருவர் சம்பவ இடத்தில் நடந்த கொடுமையின் பரபரப்பு நிமிடங்களைப் பற்றி விவரித்துள்ளார்.
நன்றி: Sun News