தவெக அரசின் பட்ஜெட் அலங்கார பட்ஜெட் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி விமர்சனம் செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு தவெக அரசு பெயிண்ட் அடித்துள்ளது. நேரலையில் எதிர்க்கட்சித் தலைவரை காண்பிக்காமல் இருட்டடிப்பு செய்துள்ளார்கள் என்று சாடியுள்ளார். அதே போல் உதயநிதி நேற்று கைது செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தார்.