போலீஸ் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்ட பின் பேசிய உதயநிதி ஸ்டாலின், "தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பிரச்சினை மற்றும் மேகதாது விவகாரம் குறித்தே பேசினேன். அதைத் திசை திருப்ப நான் பேசாததை எடிட் செய்து பரப்பியுள்ளனர். பெண்களை இழிவாகப் பேசும் எண்ணம் எனக்கு இல்லை; என் தாய் தந்தையும் அப்படி வளர்க்கவில்லை. 400 கி.மீ அழைத்து வந்து பயமுறுத்தப் பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்பட நான் கலைஞரின் பேரன்" என கூறியுள்ளார்.