தமிழகம் முழுவதும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் பயனர்களுக்கு பொங்கல் தொகுப்புடன், ரூ.3000 பொங்கள் பணம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ரேஷன் கடையில், பொங்கல் தொகுப்பில் சேலை வழங்காததால் அப்பகுதி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலை குறைவாக வந்ததாக ஊழியர்கள் கூறிவந்த நிலையில், பல இடங்களில் இதேபோல் சேலை வழங்கவில்லை என தெரியவந்ததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
நன்றி: NewsTamilTV24x7