திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (பிப்., 08) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மகாத்மா காந்தி பெயரை சிதைக்கத் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸின் போராட்டம் தொடரும். திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்டாயம் கலந்துகொள்ளும். திமுகவுடன்தான் இணைந்து பயணிப்போம்; அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை' என்று கூறியுள்ளார்.
நன்றி: பாலிமர்