இதனால் மனம் விரக்தி அடைந்த குட்டி கமல் நேற்று (மார்ச் 19) மாலை இருசக்கர வாகனத்தில் வந்து திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரி மேம்பாலத்தின் சுவரின் மேற்பகுதியில் அமர்ந்து குதித்து தற்கொலை செய்ய போவதாக கூறி தலையில் ஹெல்மெட்டுடன் குதிக்க முயற்சி செய்தார். அப்போது திருப்பரங்குன்ற பங்குனி திருவிழாவிற்கு பாதுகாப்பு பணியிலிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் முதல் நிலை காவலர் அய்யனார் ஆகியோர் குட்டி கமலிடம் கெஞ்சி குதிக்க வேண்டாம் உனக்கு என்ன உதவி வேண்டுமோ செய்து தருகிறோம் என கூறி மிகவும் லாவகமாக பேசி அவரை பிடித்து இழுத்து கீழே தள்ளி காப்பாற்றினார்.
அதன் பின்பு அவரது தந்தை கணேசன் மற்றும் குடும்பத்தினரும் அழைத்து பேசி இனிமேல் இதுபோன்று தவறுகளை செய்யக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.