மதுரை மாவட்டம் திருமங்கலம் சிந்துபட்டி அருகே உச்சிபட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி குமரேசனின் மூத்த மகள் ஜீவிகா (14) என்பவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவரை நன்றாக படிக்கும்படி பெற்றோர்கள் அறிவுரை கூறியதால் வேதனை அடைந்த மாணவி நேற்று (ஏப். 1) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிந்துபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.