பெரியகுளம் அருகே கிரவல் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

பெரியகுளம் அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய ஜேசிபி, டிராக்டர்கள் பறிமுதல்தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் பகுதியில் உரிய அனுமதியின்றி கிராவல், எம்-சாண்ட், மற்றும் ஜல்லி கற்கள் கடத்தப்பட்டு வருவதாக ஜெயமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அரசு அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி எடுக்க பயன்படுத்திய ஜேசிபி, நான்கு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். வாகனங்கள் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது

தொடர்புடைய செய்தி