இந்த விபத்தில் செல்வகுமார் படுகாயம் அடைந்தார். அவருடன் வந்த மற்றொரு தொழிலாளி மற்றும் ஆட்டோ டிரைவர் காயம் இன்றி உயிர் தப்பினர். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே செல்வகுமார் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு