தேனி: டீக்கடையில் தகராறு; 4 பேர் மீது வழக்கு

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வை பட்டி பேருந்து நிறுத்தம் அருகே முருகேசன் என்பவர் டீக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு தினமும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், பிரகாஷ், சன்ரைசி, பிரவீன் ஆகிய நால்வரும் வடை பரோட்டா சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். 

பணம் கேட்டதற்கு கடைக்கு முன்பு பட்டாசு வெடித்து தகராறு செய்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் ராஜ்குமார், பிரகாஷ், சன்ரைசி, பிரவீன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி