தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தேனியில் பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட சிறப்புத் தலைவர்கள் பன்னீர்செல்வம், அழகர்சாமி, மாவட்டச் செயலர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கு எடையாளர்களை நியமிக்க வேண்டும். 

குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை சரியான எடையில் பொட்டலமிட்டு வழங்க வேண்டும். 9-ஆவது ஊதிய மாற்றக் குழுவில் அரசு ஊழியர்களுடன் நியாய விலைக் கடை பணியாளர்களையும் சேர்க்க வேண்டும். நியாய விலைக் கடை விற்பனை முனையத்தை பழுது நீக்கும் செலவை கடை விற்பனையாளர்களிடம் வசூலிக்கக் கூடாது. 53 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் போன்ற சிறப்புத் திட்ட செயலாக்கத்துக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தொடர்புடைய செய்தி