பெரியகுளம் கோவில் திருவிழா நீர் மோர் பந்தல் அமைப்பு

பெரியகுளம் கோவில் திருவிழா நீர் மோர், குளிர்பானங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பெரியகுளம் தென்கரை அமைந்துள்ள அருள்மிகு பாலசுப்பிரமணியம் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 11) தேர்த்திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு தாகம் தீர்க்கும் விதமாக பல்வேறு அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் சார்பாக நீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு அனைவருக்கும் நீர் மோர் மற்றும் குளிர்பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி