பெரியகுளம் தென்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் அதிகாரிகள் வங்கியின் நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது தென்கரையை சேர்ந்த ராஜா பீமாராவ் என்பவர் பிப். 7 அன்று 68 கிராம் எடை கொண்ட நகையை வங்கியில் அடமானமாக வைத்து ரூ. 3.53 லட்சம் பெற்றதும். ஆனால் அவர் கொடுத்த நகை போலியானது என்பது ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் ராஜா பீமாராவை தென்கரை போலீஸார் நேற்று (மே. 9) கைது செய்தனர்.