பெரியகுளம்: காதல் விவகாரம்.. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டி கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் மணி. அவரது மகன் முத்து கணேஷ் (19 வயது). பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதற்கு பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 30) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்து கணேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த தென்கரை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முத்து கணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து தென்கரை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி