ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த ஜெயமுருகன் (40) என்பவர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பெரியகுளத்தில் பெற்றோருடன் வசித்து வந்த தனது மனைவி சண்முகப்பிரியாவை (30) தகராறு செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தென்கரை போலீஸார் வழக்குப்பதிந்து ஜெயமுருகனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.