மதுரையை சேர்ந்தவர் கென்னடி குமார் (53 வயது). இவர் சம்பவத்தினத்தன்று விவசாய வேலைக்காக தேனியில் பருத்தி விதை வாங்க வந்திருந்தார். வைகைப்புதூரிலிருந்து வட புதுப்பட்டி செல்லும் சாலையில், நின்றிருந்தபோது கத்தியை காட்டி ரூபாய் 500 பணத்தை வாலிபர் பறித்துச் சென்றார். இது குறித்து புகாரின் பேரில், அல்லி நகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கத்தியை காட்டி பணம் பறித்த தேனி பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (29 வயது) என்பவரை கைது செய்தனர்.